இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இரும்புத்திரைக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து விட்டன. அதனால் உடனடியாக ஒரு ஹிட் தேவை என்கிற கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் விஷால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வந்த படம் துப்பறிவாளன்-2. இந்த படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் அதிகப்படுத்தியதாக அவரை புகார் சொன்னதையடுத்து, இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு படமே நின்று போனது. என்றாலும், மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோதிலும் படப்பிடிப்பை தொடரவில்லை விஷால்.
இந்நிலையில் தற்போது எனிமி படத்தை முடித்து விட்டவர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை தொடரப் போகிறாராம். அதோடு தியேட்டர்களில் வெளியிடும் சூழல் அமையாத பட்சத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால்.