பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இரும்புத்திரைக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து விட்டன. அதனால் உடனடியாக ஒரு ஹிட் தேவை என்கிற கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் விஷால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வந்த படம் துப்பறிவாளன்-2. இந்த படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் அதிகப்படுத்தியதாக அவரை புகார் சொன்னதையடுத்து, இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு படமே நின்று போனது. என்றாலும், மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோதிலும் படப்பிடிப்பை தொடரவில்லை விஷால்.
இந்நிலையில் தற்போது எனிமி படத்தை முடித்து விட்டவர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை தொடரப் போகிறாராம். அதோடு தியேட்டர்களில் வெளியிடும் சூழல் அமையாத பட்சத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால்.