நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் |
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவியது. தற்போது அதன் தாக்கம் சிறிது குறைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சிலர் வேறு வழிகளில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், சுமார் 3 ஆயிரம் திரைப்பட தொழிலளார்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதி வழங்குகிறார். இது தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக யஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தோற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன்.
இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை.
இவ்வாறு யஷ் தெரிவித்துள்ளார்.