கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
கொரோனா இரண்டாவது அலைக்கு தமிழகமும் அதிக பாதிப்பை சந்தி்த்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உதவிடும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர். ரஜினி, அஜித், சூர்யா குடும்பத்தினர், விக்ரம், சிவகார்த்திகேயன், ஷங்கர், முருகதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ், தனது மனைவி ஆர்த்தி , மகள் பிரீத்தா ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தங்கள் சார்பில் கொரோனா நிவாரணப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.