விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 10,000 கோடிக்கும் மேல் படத் தயாரிப்புகளில் முடங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் சில படங்கள் அதிக பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. அப்படியான படங்களில் மூன்று படங்களின் மூலம் மட்டுமே சுமார் 1000 கோடி முடங்கிப் போயுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் 300 கோடி, பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் மூலம் 350 கோடி, 'ஆதி புருஷ்' படம் மூலம் 500 கோடி இவற்றின் மூலம் மட்டுமே 1150 கோடி முடங்கியுள்ளது.
மேலும், பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான 'சலார்' மூலம் 150 கோடி மற்றும், ”புஷ்பா - 160 கோடி, ஆச்சார்யா - 150 கோடி, சர்க்காரு வாரி பாட்டா 100 கோடி, லிகர் - 100 கோடி” என கூடுதலாக 760 கோடி, இவற்றுடன் மேலும் சில முன்னணி நடிகர்களின் தெலுங்குப் படங்களைக் கணக்கில் கொண்டால் 2000 கோடியைத் தாண்டும்.
பெரிய படங்கள் எவ்வளவு நாள் தாமதமாகிறதோ அதற்கேற்றபடி அதன் வட்டியும் கூடுதலாகும். அதனால் படத்திற்கான செலவுகளில் இன்னும் சுமை ஏறும். கொரோனா அலை சீக்கிரமே முடிவுக்கு வந்து படங்களை எப்போது முடித்து வெளியிடப் போகிறோம் என தெலுங்குத் திரையுலகினர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.