Advertisement

சிறப்புச்செய்திகள்

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல்

18 செப், 2025 - 06:04 IST
எழுத்தின் அளவு:
Rs-60-crore-fraud-Actresses-Ekta-Kapoor,-Bipasha-Basu-in-trouble

மும்பை : ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி மற்றும் தொழிலதிபர் கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்து நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவை விசாரிக்க மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா, நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பிரபலங்களை அடிப்படையாகக் கொண்ட டெலிஷாப்பிங் சேனல் ஆகும்.

பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் தொடர்பான கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.60.4 கோடி மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, குந்த்ரா உள்ளிட்ட நபர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த மோசடி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவலுக்காக, மேலும் சில பாலிவுட் பிரபலங்களை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

இந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் பெற்ற பணம் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை ஏக்தா கபூர், நேஹா துபியா, பிபாஷா பாசு ஆகியோரிடமிருந்து பெற முடிவு செய்துள்ளோம்.

நிறுவனத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக புகார் இருப்பதால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஆராயப்படுகிறது. ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதை ஆராய்வது இப்போது முக்கியம். ஆகவே பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதையும் நாங்கள் அவர்களிடம் கேட்போம். விரைவில் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படும்.

இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப்பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் ... 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in