டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை(ஏப்., 24) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ‛இன்று நேற்று நாளை' படங்களை இயக்கி ரவிக்குமார், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில்,
‛‛திருப்பூரில் பெரும்பாலோனோர் துணியிலான பனியன் கிளாத் வகையை சேர்ந்த மாஸ்க்கை அணிந்துள்ளனர். துவைத்து பயன்படுத்த வசதியாக இருப்பதால் பெரும்பாலும் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ரக மாஸ்க்குகள் கொரோனாவை ஒருபோதும் தடுக்காது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அதை தாடைக்கு கீழ் அணிந்து சுற்றுகிறார்கள்.
கூட்டமில்லாத ஒரு மளிகை கடையில் வண்டியை நிறுத்தினேன். தாடைக்கு கீழ் மாஸ்க் அணிந்தபடி கடைக்காரர் இருந்தார். அவரிடம் அண்ணா மூக்குக்கு மாஸ்க் போடுங்க என்றேனன். வேண்டா வெறுப்பாக செய்தார். ஒரு அக்கா சேலையை மூக்கால் பொத்தியபடி வந்தார். வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை. மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருப்பூர் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.




