மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷை தன்னுடைய 'ராஞ்சனா' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய். தற்போது தனுஷ், ஹிந்தியில் நடித்து வரும் 'அத்ரன்கி ரே' படத்தின் இயக்குனரும் ஆனந்த் தான். தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் கடந்த வாரம் தான் ஓடிடி தளத்தில் வெளியானது.
அப்படத்தை ஆனந்த் பார்த்துவிட்டு அவரது கருத்தை டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். “அற்புதம், புத்திசாலித்தனம்....கர்ணன் படத்தின் அனுபவத்தை இப்படித்தான் என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள். தனுஷ், நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன், எனது நண்பா நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'கர்ணன்' படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான போது கிடைத்த விமர்சனம், பாராட்டுக்களை விட தற்போது ஓடிடி தளத்தில் வெளிவந்த பிறகு பலரும் பல காட்சிகளை நிறுத்தி நிறுத்திப் பார்த்து தற்போது இரண்டாவது ரவுண்டாக விமர்சித்து வருகிறார்கள்.