துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. செம்மரக் கடத்தல் பற்றிய கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள காடுகளில் நடைபெற்றது. தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இப்படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது என செய்திகள் வெளிவந்தன. ஆனால், படக்குழுவினரிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.
“புஷ்பா' கதையில் பலவிதமான காலகட்டங்கள் உள்ளன. இரண்டரை மணி நேரத்தில் மொத்த கதையையும் சுருக்குவது இயலாத விஷயம். அதனால், நாங்களும், இயக்குனர், நாயகன் இணைந்து பேசி படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்போம். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் 10 சதவீதம் முடித்துவிட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
நவராத்திரியின் போது முதல் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தை அடுத்த வருட கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.