புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து ஐதராபாத் புறநகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவருக்கு டாக்டர்கள் பிரத்தியேகமாக சிகிச்சை அளித்தனர்.
அவர் நடித்த 'வக்கீல் சாப்' படம் கடந்த மாதம் வெளிவந்தது. அப்போது அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அவருக்குக் கொரோனா வந்திருக்கலாம் என்று சொன்னார்கள். தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அவருடைய ஜனசேனா காட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
“ஜனசேனா கட்சித் தலைவர் குணமடைந்துவிட்டார். கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை செய்யப்பட்ட பவன் கல்யாண், மூன்று நாட்களுக்கு முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. அவருக்கு உடல் ரீதியாக வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. இருந்தாலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு வரும் வீக்னெஸ் மட்டும் தான் இருக்கிறது என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்காக பிரார்த்தனையும், பூஜைகளையும் செய்த ஜனசேனா தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள், முன்னெச்சரிக்கை விஷயங்கள் ஆகியவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என பவன் கல்யாண் கேட்டுக் கொண்டுள்ளார்,” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கொரோனாவிலிருந்து பவன் கல்யாண் குணமடைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.