ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் அவர்களால் முடிந்த சில உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள். நேற்று புதிதாக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசும் கொரோனா தடுப்புக்கான விஷயங்களை உடனடியாக முன்னெடுத்துள்ளது. மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்து சென்னையைத் தவிர பிற முக்கிய மாநகரங்களிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் கொரோனா தடுப்பு பற்றிய சில அறிவிப்புகளுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா உணவகம் திறப்பு ஆகியவற்றை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு அரசுக்கு ஆதரவாக டுவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கோவிட்டை எதிர்ப்பதில் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் தமிழக மக்கள் உதவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒரு அரசால் மட்டும் இதைச் செய்ய முடியாது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நாமும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும், நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம், சிறு துளி பெரு வெள்ளம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




