கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் அவர்களால் முடிந்த சில உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள். நேற்று புதிதாக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசும் கொரோனா தடுப்புக்கான விஷயங்களை உடனடியாக முன்னெடுத்துள்ளது. மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்து சென்னையைத் தவிர பிற முக்கிய மாநகரங்களிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் கொரோனா தடுப்பு பற்றிய சில அறிவிப்புகளுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா உணவகம் திறப்பு ஆகியவற்றை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு அரசுக்கு ஆதரவாக டுவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கோவிட்டை எதிர்ப்பதில் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் தமிழக மக்கள் உதவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒரு அரசால் மட்டும் இதைச் செய்ய முடியாது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நாமும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும், நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம், சிறு துளி பெரு வெள்ளம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.