படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் அவர்களால் முடிந்த சில உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள். நேற்று புதிதாக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசும் கொரோனா தடுப்புக்கான விஷயங்களை உடனடியாக முன்னெடுத்துள்ளது. மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்து சென்னையைத் தவிர பிற முக்கிய மாநகரங்களிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் கொரோனா தடுப்பு பற்றிய சில அறிவிப்புகளுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா உணவகம் திறப்பு ஆகியவற்றை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு அரசுக்கு ஆதரவாக டுவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கோவிட்டை எதிர்ப்பதில் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் தமிழக மக்கள் உதவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒரு அரசால் மட்டும் இதைச் செய்ய முடியாது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நாமும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும், நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம், சிறு துளி பெரு வெள்ளம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.