சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிக்க போராடி வருகிறவர்களில் ஒருவர் ஜோதிஷா. நலம்தானா உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இசை ஆல்பங்களில் நடித்தார். சில படங்களில் 2வது நாயகியாக நடித்தார். இப்போது மீண்டும் புறாக்கூண்டு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சார்லஸ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜி எக்ஸ்போர்ட், ஜி கிரியட்டிவ் நிறுவனத்தின் சார்பில் குளோரியா பெர்னாட், சிமோக்ஷன் தயாரிக்கிறார்கள், நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். தீபக் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இதயதீபன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது அடிதட்டு மக்களின் காதலை சொல்லும் படம். பணக்கார பெண்கள் யாரும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதில்லை. நடுத்தர குடும்பத்து பெண்களும், அடித்தட்டு குடும்பத்து பெண்களும் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஏன் என்பது தான் படத்தின் கரு. காதல் என்றாலே பிரச்னைகளை சந்திக்கும் குடும்பங்கள், ஒரு தற்கொலையால் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கும் என்பதை யதார்த்தமாக சொல்கிற படம். என்றார்.