ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதிக்கான ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் ரோஜா குடும்பத்தினர் பெரும்பாலும் நகரியில்தான் இருப்பார்கள்.
ரோஜா, செல்மணி தம்பதியருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான பிறகுதான் அன்சுமாலிகாவும் அம்மாவைப் போலவே அழகாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.
சமீபத்தில் அன்சுமாலிகா, ரோஜா ஆகியோர் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. விரைவில் அன்சுமாலிகா சினிமாவில் நடிப்பார் என்ற செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
“வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன்,” என அவர் தெரிவித்துள்ளாராம். இருந்தாலும் சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அன்சுமாலிகாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.