'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் முதன்முதலாக ஓடிடி தளத்திற்கு வந்ததை அடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் வசூலை கொடுத்து அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கேற்ப கொரோனா அலையும் தொடர்ந்து வீசிக்கொண்டிருப்பதால் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகப்போகின்றன.
இந்த நிலையில், தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இயக்கி வரும் மணிரத்னம் இதுவரை தான் இயக்கியுள்ள தளபதி, ரோஜா உள்ளிட்ட 26 படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிடப்போகிறாராம். அதனால் தற்போது தனது படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்கியிருக்கிறார் மணிரத்னம்.