ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் முதன்முதலாக ஓடிடி தளத்திற்கு வந்ததை அடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் வசூலை கொடுத்து அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கேற்ப கொரோனா அலையும் தொடர்ந்து வீசிக்கொண்டிருப்பதால் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகப்போகின்றன.
இந்த நிலையில், தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இயக்கி வரும் மணிரத்னம் இதுவரை தான் இயக்கியுள்ள தளபதி, ரோஜா உள்ளிட்ட 26 படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிடப்போகிறாராம். அதனால் தற்போது தனது படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்கியிருக்கிறார் மணிரத்னம்.