வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கேரளாவை பொறுத்தவரை முதல் அலையில் ஆரம்பத்தில் கவனமாக இருந்தாலும், பின்னர் வந்த நாட்களில் நிறைய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது அலையையும் சமாளிக்கும் விதமாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அப்படி தான் இதுவரை கொரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகளை தனது டுவிட்டர் பக்கத்திலும் அப்டேட் செய்துள்ளார் கேரளா முதல்வர். இதனை கண்டு வியந்துபோன நடிகை ஐஸ்வர்ய லட்சுமி முதல்வரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுபற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐ லவ் யூ சீப் மினிஸ்டர். நான் எந்த ஒரு கட்சியை சேர்ந்தவளும் அல்ல. ஆனால் நமது மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் கையாளும் விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் உங்களது செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கையை தருகிறது” என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஜோடியாக அறிமுகமான மலையாள நடிகை' ஐஸ்வர்ய லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது