பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர், இப்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். சீக்கிரம் இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவேன்'' என தெரிவித்துள்ளார் அதர்வா.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாதவன், அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.