மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர், இப்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். சீக்கிரம் இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவேன்'' என தெரிவித்துள்ளார் அதர்வா.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாதவன், அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.