ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 99 சாங்ஸ் படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கெனவே அவர் சில இந்தி படங்களில் ஓரிரு காட்சிகளில் பாடகராக வந்து பாடல்கள் பாடி இருக்கிறார். இசை ஆல்பங்களில் தோன்றி நடித்திருக்கிறார். வந்தேமாதம் ஆல்பத்தில் அவர் தோன்றி நடித்தது உலக புகழ்பெற்றது. இந்த நிலையில் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்.
சிலர் படம் இயக்குவீர்களா? என்று கேட்கிறார்கள். அந்த ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்க்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என்றார் ரஹ்மான்.