வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் அதுதான் அனுமதியாக இருந்தது. பின்னர்தான் முழுமையாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
ஆனால், 100 சதவீத அனுமதி வருவதற்கு முன்பே தமிழில் வெளிவந்த 'மாஸ்டர்' படம் பெரிய வசூலைக் குவித்தது. முதல் நாள் வசூலாக 35 கோடி வசூலித்தது.
தென்னிந்திய அளவில் அதுதான் கொரோனா தளர்வுகளுக்குப் பின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை பவன் கல்யாண் நடித்து நேற்று தெலுங்கில் வெளிவந்த 'வக்கீல் சாப்' படம் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
'வக்கீல் சாப்' படத்தின் முதல் நாள் 40 கோடியைக் கடந்துள்ளதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிலர் 50 கோடி என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், 'வக்கீல் சாப்' படத்தின் வசூலை 'மாஸ்டர்' பட வசூலுடன் ஒப்பிடக்கூடாது என்பதுதான் உண்மை. 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் மட்டுமே வெளியான படம். 'வக்கீல் சாப்' படம் 100 சதவீத இருக்கைகளில் வெளிவந்த படம்.
'வக்கீல் சாப்' படம் 100 கோடி வசூலை எளிதில் கடந்துவிடும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதற்கு மேலும் வசூலிக்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.