புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் அதுதான் அனுமதியாக இருந்தது. பின்னர்தான் முழுமையாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
ஆனால், 100 சதவீத அனுமதி வருவதற்கு முன்பே தமிழில் வெளிவந்த 'மாஸ்டர்' படம் பெரிய வசூலைக் குவித்தது. முதல் நாள் வசூலாக 35 கோடி வசூலித்தது.
தென்னிந்திய அளவில் அதுதான் கொரோனா தளர்வுகளுக்குப் பின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை பவன் கல்யாண் நடித்து நேற்று தெலுங்கில் வெளிவந்த 'வக்கீல் சாப்' படம் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
'வக்கீல் சாப்' படத்தின் முதல் நாள் 40 கோடியைக் கடந்துள்ளதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிலர் 50 கோடி என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், 'வக்கீல் சாப்' படத்தின் வசூலை 'மாஸ்டர்' பட வசூலுடன் ஒப்பிடக்கூடாது என்பதுதான் உண்மை. 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் மட்டுமே வெளியான படம். 'வக்கீல் சாப்' படம் 100 சதவீத இருக்கைகளில் வெளிவந்த படம்.
'வக்கீல் சாப்' படம் 100 கோடி வசூலை எளிதில் கடந்துவிடும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதற்கு மேலும் வசூலிக்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.