வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் |
விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அடுத்து தனுஷ் ஜோடியாக 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் வரிசையில் இவரும் புதிதாகச் சேர்ந்துள்ளார்.
“கொரோனால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளியை பார்க்கிறீர்கள். நானும் மாஸ்க் அணிந்தேன், சானிட்டைஸ் செய்து கொண்டேன், சமூக இடைவெளி கடைபிடித்தேன். பரிந்துரைத்த எல்லாவற்றையும் செய்தேன். ஒரு கட்டத்தில் சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். அது எனது இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இருப்பினும் அதை எளிதாக எடுத்துக் கொண்டேன். நுரையீரல் வலுவடைய யோகா செய்கிறேன். மல்டிவிட்டமின்கள் எடுக்கிறேன். பால்கனியிலிருந்து என பெற்றோருடன் உரையாடுகிறேன். கடைசியாக ஒன்றை அறிந்தேன். மாஸ்க் அணியுங்கள், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். ஆனால் கொரோனாவை சாதாரணமாக எடுக்காதீர்கள்'' என தனது கொரோனா அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.