வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அடுத்து தனுஷ் ஜோடியாக 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் வரிசையில் இவரும் புதிதாகச் சேர்ந்துள்ளார்.
“கொரோனால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளியை பார்க்கிறீர்கள். நானும் மாஸ்க் அணிந்தேன், சானிட்டைஸ் செய்து கொண்டேன், சமூக இடைவெளி கடைபிடித்தேன். பரிந்துரைத்த எல்லாவற்றையும் செய்தேன். ஒரு கட்டத்தில் சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். அது எனது இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இருப்பினும் அதை எளிதாக எடுத்துக் கொண்டேன். நுரையீரல் வலுவடைய யோகா செய்கிறேன். மல்டிவிட்டமின்கள் எடுக்கிறேன். பால்கனியிலிருந்து என பெற்றோருடன் உரையாடுகிறேன். கடைசியாக ஒன்றை அறிந்தேன். மாஸ்க் அணியுங்கள், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். ஆனால் கொரோனாவை சாதாரணமாக எடுக்காதீர்கள்'' என தனது கொரோனா அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.