என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் முன்னணி நடிகை ஆனார் ரெஜினா கெசண்ட்ரா. அதன்பிறகு மீண்டும் தமிழுக்கு வந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா உள்பட பல படங்களில் நடித்தார்.
தற்போது பார்ட்டி, கள்ளபார்ட், கசட தபற, சூர்ப்பனகை படங்களில் நடித்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு தற்போது துடுப்பு படகு நீர் சறுக்கு விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஐதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அவர் அந்த மையத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றிருக்கிறார்.
இதன் வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள ரெஜினா. "முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி". என்று தெரிவித்திருக்கிறார். ரெஜினாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.