'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கொரோனா வந்தாலும் வந்தது திரையுலகம் ஏறக்குறைய விழுந்தே கிடக்கிறது. கொரோனா தளர்வுகளின் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்ட பிறகும் கூட தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்கள் படம் பார்த்து ரசித்தார்கள்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த படங்கள் வியாபார ரீதியில் லாபத்தைக் கொடுக்கும் அளவிற்கு வசூலிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனிடையே, அடுத்த பெரிய நடிகரின் படமாக கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படம் நாளை மறுநாள் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 450 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகிறது. 'மாஸ்டர்' படத்திற்கு வந்ததைப் போலவே இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை தேர்தல் பரபரப்பிலும் ரசிகர்கள் 'சுல்தான்' படம் பார்க்க தியேட்டர்கள் பக்கம் வந்துவிட்டால் அடுத்த வாரம் வெளியாக உள்ள 'கர்ணன்' படத்தையும் பார்க்க வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.
அது திரையுலகம் மீண்டும் உயிர்த்தெழ காரணமாக இருக்கும். இரண்டு படங்களுமே ரசிகர்கள எதிர்பார்க்கும் படங்களாக அமைந்துவிட்டால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாக உள்ள படங்களுக்கும் புத்துணர்வைத் தரும்.