50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நயன்தாராவைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதென செய்திகள் பரவி வருகின்றன. அது குறித்து இருவருமே எந்த ஒரு மறுப்பையும் வெளியிடவில்லை.
அவர்களது காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. இரு வீட்டாரும் ஏற்கெனவே சம்மதம் சொல்லிவிட்டனர். நயன்தாரா 36 வயதைக் கடந்துவிட்டார். எனவே, இனிமேலும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாமென நயன்தாரா நினைக்கிறாராம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவாவைக் காதலித்த போது இந்து மதத்திற்கு மாறினார். காதலர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கும் சென்று வந்தார். அவர்களது திருமணம் எந்த முறைப்படி நடக்கும், எங்கு நடக்கும் என்பது குறித்தும் முடிவெடுத்துவிட்டார்களாம். விரைவில் அவர்களது திருமணத் தேதி பற்றி அறிவிப்பு வெளியிடலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.