காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நயன்தாராவைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதென செய்திகள் பரவி வருகின்றன. அது குறித்து இருவருமே எந்த ஒரு மறுப்பையும் வெளியிடவில்லை.
அவர்களது காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. இரு வீட்டாரும் ஏற்கெனவே சம்மதம் சொல்லிவிட்டனர். நயன்தாரா 36 வயதைக் கடந்துவிட்டார். எனவே, இனிமேலும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாமென நயன்தாரா நினைக்கிறாராம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவாவைக் காதலித்த போது இந்து மதத்திற்கு மாறினார். காதலர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கும் சென்று வந்தார். அவர்களது திருமணம் எந்த முறைப்படி நடக்கும், எங்கு நடக்கும் என்பது குறித்தும் முடிவெடுத்துவிட்டார்களாம். விரைவில் அவர்களது திருமணத் தேதி பற்றி அறிவிப்பு வெளியிடலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.