மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கங்கனா பற்றி பேசிய பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், “இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவை அழைத்தபோது, ஜெயலலிதா மாதிரி நடிக்க நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.. நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா.. கங்கனாவும் அதே போன்றவர் தான். தற்போது தேசிய விருதை வென்றுள்ளார். தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.” என கூறினார்
இந்தபடத்திற்கும் விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார். ஏற்கனவே கங்கனா இந்தியில் நடித்து இயக்கிய மணிகர்ணிகா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியும் உள்ளார். அந்த நட்பின் அடிப்படையில், விஜயேந்திர பிரசாத் தான் இந்தப் படத்திற்குள் கங்கனாவை அழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..