300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தேசிய விருது பெற வேண்டும் என்பது இந்தியத் திரையுலகில் இருக்கும் பலருக்கும் ஒரு கனவாக இருக்கும். ஆனால், அந்த விருதும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. ஒரு சிலருக்கு மட்டுமே விருதுகள் இரண்டு முறைக்கு மேல் கிடைத்திருக்கின்றன. ஆனால், 20 வருட இடைவெளியில் மீண்டும் கிடைத்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரிய நிகழ்வு தான். அந்த ஆச்சரியத்திற்கச் சொந்தக்காரர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்.
அவர் முதன் முதலாக இயக்கி நடித்து 1989ம் ஆண்டு வெளிவந்த 'புதிய பாதை' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதற்குப்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து பார்த்திபன் இயக்கி நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த 'ஹவுஸ்புல்' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
அடுத்து இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு தேசிய விருதைப் பெற்றுள்ளார் பார்த்திபன். 2019ம் ஆண்டு அவரது இயக்கம், நடிப்பில் வெளிவந்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு சிறப்பு மென்ஷன் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு வருட இடைவெளியில் இந்தியத் திரையுலகில் வேறு யாராவது தேசிய விருதை வென்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.