காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இயற்கை சார்ந்த படங்களை எடுத்து தன்னைத் தமிழ் சினிமாவில் பேச வைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். 'மைனா, கும்கி' ஆகிய படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிலும் குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 'கயல்' படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள 'காடன்' படம் தமிழ், தெலுங்கில் நாளை மறுதினம் 26ம் தேதி வெளியாக உள்ளது.
'மைனா, கும்கி' இரண்டு படங்களுமே காடு சார்ந்த படங்கள். அந்த வரிசையில் இந்த 'காடன்' படமும் காடு சார்ந்த படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெற்றியை இருவருமே மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அது போலவே பிரபு சாலமனுக்கும் இது முக்கியமான படம்தான். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கயல், தொடரி' ஆகிய இரண்டு படங்களுமே தோல்விப் படங்கள் தான்.
இந்த 'காடன்' வெற்றி அவர்கள் மூவருக்குமே முக்கியமான ஒன்று.