சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
2005ல் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதையடுத்து, சந்திரமுகி 2வில் சிம்ரன், ஜோதிகா, கியாரா அத்வானி போன்ற நடிகைகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானபோது அதற்கு மறுப்பு தெரிவித்தார் லாரன்ஸ். இந்நிலையில் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வரும் அவர், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மே மாதம் முதல் சந்திரமுகி-2 படத்தில் நடிக்க தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சந்திரமுகி படத்தில் மனோதத்துவ டாக்டர் வேடத்தில் வேட்டையன் பங்களாவிற்குள் செல்வார் ரஜினி. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அதே பங்களாவிற்குள் ஒரு புதிய குடும்பம் செல்வதும் அதன்பிறகு வேட்டையன் என்ட்ரி கொடுப்பது போன்றும் கதை பண்ணப்பட்டுள்ளதாம். அந்த வகையில் சந்திரமுகி-2 படம் முழுக்க வேட்டையனாகவே நடிக்கிறாராம் லாரன்ஸ்.