ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படம் உருவாகி வருகிறது. கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், இளவரசு என பல குணச்சித்திர நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். கடந்த மாதம் சூர்யா, கொரோனா தொற்றுக்கு ஆளானதால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக தான் நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியதும் நலமாக உணர்கிறேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பாண்டிராஜின் வழக்கமான பாணியிலிருந்து இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. .