400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படம் உருவாகி வருகிறது. கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், இளவரசு என பல குணச்சித்திர நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். கடந்த மாதம் சூர்யா, கொரோனா தொற்றுக்கு ஆளானதால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக தான் நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியதும் நலமாக உணர்கிறேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பாண்டிராஜின் வழக்கமான பாணியிலிருந்து இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. .