நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
தெலுங்குத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகவும், பிரபலமானவராகவும் வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே ஒரு படம் அவரை உச்சத்துக் கொண்டு சென்றது.
தெலங்கானா மாநிலத்தில் தனது சொந்த ஊரான மெகபூப் நகரில் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்க உள்ளார் விஜய். ஏற்கெனவே சொந்தமாக 'ரவுடி வேர்' என்ற ஆடை கம்பெனியையும், கிங் ஆப் த ஹில் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள விஜய், அடுத்த பிஸினஸ் ஆக இந்த தியேட்டர் பிஸினஸ் இடம் பெறுகிறது.
பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து எவிடி, அதாவது ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ் என்ற பெயரில் முதல் மல்டிபிளக்ஸ வளாகம் மெகபூப் நகரில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவர உள்ள 'வக்கீல் சாப்' படம் தான் முதன் முதலாகத் திரையிடப்பட உள்ளது.
ஏற்கெனவே ஏசியன் சினிமாஸ் நிறுவனம், ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற பெயரில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து பெரிய மல்டிபிளக்ஸ தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகரும் சொந்தமாக இன்னும் தியேட்டர்களை ஆரம்பிக்கவில்லை. ஆனால், சொந்தப் பட நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்.