ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தியேட்டர்களுக்கு நேரடியாக சென்று, வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாதவர்களுக்கு, ஆன்லைன் புக்கிங் என்பது ஒரு வரப்பிரசாதம் தான்.. ஆனால் அதையே சாக்காக வைத்து படத்தின் டிக்கெட் கட்டணத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத தொகையை, இணையதள சேவை கட்டணம் என்கிற பெயரில் வசூலித்து வருகின்றன ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள்.. இதில் குறிப்பிட்ட அளவு பங்குத்தொகை கிடைப்பதால், இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக டிக்கெட் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ரூபாய் புக்கிங் கட்டணமாக வசூலித்தனர். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக சூழல் மாறியுள்ளதால், அதில் சற்று குறைத்து அதிகபட்சமாக 28 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இந்தநிலையில் ஆந்திராவை சேர்ந்த விஜயகோபால் என்பவர், இந்த ஆன்லைன் கட்டணம் என்பது பகல் கொள்ளை, வாடிக்கையாளர்களின் உரிமையை மீறும் செயல் என்று கூறி, ஐதராபாத் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்படி கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களில் ஒன்றான 'புக் மை ஷோ' நிறுவனத்தின் மீதும் இந்த கட்டண கொள்ளைக்கு உடந்தையாக செயல்படுவதாக பிவிஆர் சினிமா நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் புக்கிங் நிறுவனமான 'புக் மை ஷோ' மற்றும் பிவிஆர் சினிமா ஆகியவற்றுக்கு ரூ.5000 அபராத தொகை விதித்துள்ளது, மேலும் பாதிக்கப்பட மனுதாரர் விஜயகோபாலுக்கு ரூ.25000 நஷ்ட ஈடாகவும் ரூ.1000 வழக்கு செலவு தொகையாகவும் கொடுக்கும்படி இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது. மேலும் இதுபோன்று விஷயங்களில் 6 ரூபாய்க்கு மேல் சேவை கட்டணமாக வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் கூறியுள்ளது.