டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஒருவழியாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதேப்போல நடிகர் மோகன்பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள 'மொசகல்லு' படத்தை தயாரித்து, புரமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தி விட்டார். வரும் மார்ச்-19ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்பாபு இருவரும் கோடை விடுமுறையாக சிக்கிம் கிளம்ப தயாராகி விட்டார்கள். இவர்கள் இருவரையும் ஒருசேர புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. மேலும், “நண்பர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பிவிட்டார்கள்.. நீங்கள் மட்டும் ஜாலியாக கிளம்புகிறீர்களே, குழந்தைகளாகிய எங்களையும் ஏதாவது ஒருநாள் அழைத்து செல்லக்கூடாதா..?” என ஏக்கத்துடன் கேட்டுள்ளார்.




