ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க விபிஎப் நிறுவனங்கள் வருகிற மார்ச் 31ந் தேதி வரை சலுகை கட்டணத்தை அறிவித்தது. அது தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு தற்போது பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது.
விபிஎப் கட்டணம் மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளது.