எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. கடந்த ஆண்டிலேயே வெளியாக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக தாமதமாகி வந்த நிலையில், மார்ச் 26-ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு, இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். அதேசமயம் முன்பு யானைகளைக் கண்டு பயந்தேன். ஆனால் யானைகள் குழந்தை மாதிரி என்பது அவற்றுடன் பழகிய பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்தவகையில் எனக்கு இப்போது யானைகள் மீது பயமில்லை. மனிதர்கள் மீதுதான் பயம் என்று சொன்னார் விஷ்ணு.
இந்த நிலையில் தற்போது ஒரு யானையின் மீது தான் கூலாக ஏறி அமர்ந்து விட்டு, இறங்கும் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு. படப்பிடிப்பு தளத்தில் யானையுடன் பழகிய விதம் குறித்தும் அதில் பதிவிட்டுள்ளார்.