ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. கடந்த ஆண்டிலேயே வெளியாக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக தாமதமாகி வந்த நிலையில், மார்ச் 26-ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு, இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். அதேசமயம் முன்பு யானைகளைக் கண்டு பயந்தேன். ஆனால் யானைகள் குழந்தை மாதிரி என்பது அவற்றுடன் பழகிய பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்தவகையில் எனக்கு இப்போது யானைகள் மீது பயமில்லை. மனிதர்கள் மீதுதான் பயம் என்று சொன்னார் விஷ்ணு.
இந்த நிலையில் தற்போது ஒரு யானையின் மீது தான் கூலாக ஏறி அமர்ந்து விட்டு, இறங்கும் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு. படப்பிடிப்பு தளத்தில் யானையுடன் பழகிய விதம் குறித்தும் அதில் பதிவிட்டுள்ளார்.