பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த 2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது இந்து வி.எஸ் என்பவர் டைரக்சனில் உருவாகும் 19(1)(a) என்கிற இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் முதன்முறையாக விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த, அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அதனால், படப்பிடிப்பில் பேசி நடித்தது போல, டப்பிங்கிலும் தமிழ், மலையாளம் இரண்டையும் தனது சொந்த குரலிலேயே பேசுகிறாராம்.