இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'முதன்முதலாக' என்று சொல்லக்கூடிய பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் நடிகை பார்வதி.. ஆம்.. மலையாளத்தில் மம்முட்டியுடன் முதன்முறையாக 'புழு' என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் பார்வதி. அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை துல்கர் சல்மான் ரிலீஸ் செய்கிறார். இது மலையாள திரையுலகை பொறுத்தவரை உண்மையிலேயே ஆச்சர்யமான செய்தி தான்.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' என்கிற படத்தில், பெண்களை மம்முட்டி இழிவுபடுத்தியுள்ளதாக பார்வதி கூறினார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியதுடன் அப்படியே பார்வதிக்கு எதிராக திரும்பி, அதனால் கொஞ்ச காலம் படவாய்ப்புகளே கிடைக்காமல் சிரமப்பட்டார் பார்வதி.
அதன்பிறகு ஒரு பேட்டியில், “மம்முட்டியை பற்றியும் அவருடைய படத்தை பற்றியும் விமர்சிக்கவில்லை. நான் பொதுவாக பேசியதை, சிலர் மம்முட்டிக்கு எதிராக பேசியதாக கூறி திரித்து விட்டார்கள்” என விளக்கமும் அளித்தார் பார்வதி. அதன்பின் நிலைமை ஒரளவு சீராகி, பட வாய்ப்புகள் மீண்டும் பார்வதியை தேடி வரத்தொடங்கின. இதோ இப்போது மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நீண்டநாள் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.