அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாநாடு படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதுகுறித்து டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகையில், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. அப்போது எடுக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மாநாடு ரிலீஸ் தேதியை உறுதி செய்து அறிவித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.