மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாநாடு படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதுகுறித்து டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகையில், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. அப்போது எடுக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மாநாடு ரிலீஸ் தேதியை உறுதி செய்து அறிவித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.