லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? |
கதாநாயகி, வில்லி, கேரக்டர் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது பிரபலமாகி உள்ளார் அதோடு, பெண்களுக்கு உதவி செய்யும் சேவ்சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி தனது 36ஆவது பிறந்த நாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார் வரலட்சுமி. அதையடுத்து மீடியாக்களை சந்தித்தவர், சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் எனது பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் மீடியாக்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, திருமணம் குறித்த ஒரு கேள்வியும் அவர் முன்பு வைக்கப்பட்டது. மற்ற கேள்விகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதிலளித்த வரலட்சுமி, அந்த கேள்வியை கேட்டதும் செம கோபமாகி விட்டார்.
''பெண்கள் என்றாலே கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா? ஆண்களைப் போன்று எங்களைப் போன்ற பெண்களுக்கும் வாழ்க்கையில் கொள்கைகள் இருக்கக்கூடாதா? எப்போது சந்தித்தாலும் திருமணம் எப்போது? என்று கேட்கும் கேவலமான கேள்வியை இனிமேலும் என்னிடத்தில் கேட்காதீர்கள்'' என்று காட்டமாக பதிலளித்தார் வரலட்சுமி.