ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
புச்சி பாபு சனா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்வ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'உப்பெனா'.
இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு புதுமுகம் நடித்து வெளிவந்த படம் கொரானோ காலகட்டத்திலும் ரூ.100 கோடி வசூலித்தது சாதாரண விஷயமல்ல என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இப்படத்தைப் பார்த்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
தியேட்டர் வசூலில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்த இப்படத்தின் ஓடிடி உரிமை கூட பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. படத்தில் அறிமுகமான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி ஆகியோருக்கு பல புதிய பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவரைத் தேடியும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம்.
தெலுங்குத் திரையுலகில் கொரானாவிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளியான ஒரு படம் ரூ.100 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை.