அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி |
தெலுங்குத் திரையுலகத்தில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது 'உப்பெனா'. புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இப்படம் வெளிவந்து ஒரு வாரமாகி உள்ளது. இந்த ஒரு வாரத்தில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படம் எதுவும் இந்த அளவிற்கு வசூல் செய்ததில்லையாம். சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் நடத்திவிட்டார்கள். படக்குழுவினர் சில ஊர்களில் தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்கள்.
இப்படத்தில் நடித்துள்ள வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தெலுங்கில் அடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழில் நிறைய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இனி தெலுங்கிற்காகவும் தனது தேதிகளை ஒதுக்க வேண்டி வரும்.
இயக்குனர் புச்சிபாபுவிற்கு தெலுங்கில் அதிக டிமான்ட் ஏற்பட்டுவிட்டதாம். உணர்சிச்சிபூர்வமாக படத்தைக் கொடுத்த அவரை பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.