கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
தமிழ் சினிமா கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கத்தால் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது.
50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்தார்கள். பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே கூட்டம் வந்தது. அதன்பின்பு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவற்றைப் பார்க்க பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் உள்ள பெரிய தியேட்டர்கள், பெரிய சிங்கிள் தியேட்டர்கள் பலவும் மூடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையில் முக்கிய மல்டிபிளக்ஸ் வளாகமான சத்யம் காம்ப்ளக்சில் சத்யம், சாந்தம் ஆகிய தியேட்டர்களில் கடந்த பல நாட்களாகவே காட்சிகள் நடக்கவில்லையாம். அங்குள்ள சிறிய தியேட்டர்களை மட்டுமே திறந்து வைத்துள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டுவது அரிதாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும் என்ற பெரும் கவலையில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.