பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமா கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கத்தால் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது.
50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்தார்கள். பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே கூட்டம் வந்தது. அதன்பின்பு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவற்றைப் பார்க்க பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் உள்ள பெரிய தியேட்டர்கள், பெரிய சிங்கிள் தியேட்டர்கள் பலவும் மூடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையில் முக்கிய மல்டிபிளக்ஸ் வளாகமான சத்யம் காம்ப்ளக்சில் சத்யம், சாந்தம் ஆகிய தியேட்டர்களில் கடந்த பல நாட்களாகவே காட்சிகள் நடக்கவில்லையாம். அங்குள்ள சிறிய தியேட்டர்களை மட்டுமே திறந்து வைத்துள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டுவது அரிதாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும் என்ற பெரும் கவலையில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.