300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அடுத்த வாரம் முதல் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இன்று அறிவித்துவிட்டார்.
எனவே, தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கோடைக்கு முன்பாகவே கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் களைத்துப் போய் ஓய்வெடுப்பார். அதனால், தேர்தல் முடிந்து ஏப்ரல் மாதமும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அடுத்து மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதற்குப் பிறகு மட்டுமே அவரால் 'இந்தியன் 2, விக்ரம்' படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும். 'இந்தியன் 2' படப்பிடிப்பு கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் இயக்குனர் ஷங்கர் தெலுங்குப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு கமல்ஹாசன் முன்னுரிமை கொடுப்பார் என்பது தெரிய வரும்.