நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், ,தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், தோல்வி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாக மன்சூர் அலிகான் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், சட்டசபை தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இது வருத்தத்தை தருகிறது. தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளேன் என கூறினார். சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து மன்சூர் அலிகான் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.