பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா ஊரடங்கு முடிந்து 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். சில பெரிய படங்கள் தியேட்டருக்கு வந்தாலும் பல படங்கள் ஓடிடி தளத்திற்கு செல்கின்றன.
இதற்கிடையில் விபிஎப் நிறுவனங்கள் அறிவித்துள்ள கட்டண சலுகை வருகிற மார்ச் 31ந் தேதியுடன் முடிகிறது. விபிஎப் கட்டணத்தை கட்ட மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் என்பதில் தியேட்டர் உறுதியுடன் இருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் பல சுற்று பேச்சு நடத்தியும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வருகிற மார்ச் 1ந் தேதி முதல் தியேட்டர்களை மூட தியேட்டர் அதிபர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு விரைவில் கூட இருக்கிறது.ூ.