துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கொரோனா ஊரடங்கு முடிந்து 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். சில பெரிய படங்கள் தியேட்டருக்கு வந்தாலும் பல படங்கள் ஓடிடி தளத்திற்கு செல்கின்றன.
இதற்கிடையில் விபிஎப் நிறுவனங்கள் அறிவித்துள்ள கட்டண சலுகை வருகிற மார்ச் 31ந் தேதியுடன் முடிகிறது. விபிஎப் கட்டணத்தை கட்ட மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் என்பதில் தியேட்டர் உறுதியுடன் இருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் பல சுற்று பேச்சு நடத்தியும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வருகிற மார்ச் 1ந் தேதி முதல் தியேட்டர்களை மூட தியேட்டர் அதிபர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு விரைவில் கூட இருக்கிறது.ூ.