ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
தமிழில் “ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்', தெலுங்கில் 'ஏ மாய சேசவே, ரேஸ் குர்ரம், கிக் 2, ப்ரூஸ் லீ' கன்னடத்தில் 'ஜாக்குவார்', மலையாளத்தில் 'கலெக்டர், வில்லன்' ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
தற்போது தமிழில் 'துருவ நட்சத்திரம், துக்ளக் தர்பார்' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'ராதே ஷ்யாம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்யப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மனோஜ்.
“மாநிலத்தில் அனைவராலும் நேசிக்கப்படும், விரைவில் இந்தியா முழுவதும் நேசிக்கப்பட உள்ள அற்புதமான மனிதருடன் மீண்டும் மற்றொரு பயணத்தை ஆரம்பிக்கப் போவது மகிழ்ச்சி. 'நண்பன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். 'தளபதி 65' ஒரு பான் இந்தியா படமாக இருக்கப் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.