Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படம், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மகிழ்ச்சி

25 பிப், 2021 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Manoj-Paramahamsa:-Thalapathy-65-is-going-to-be-a-pan-Indian-film

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

தமிழில் “ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்', தெலுங்கில் 'ஏ மாய சேசவே, ரேஸ் குர்ரம், கிக் 2, ப்ரூஸ் லீ' கன்னடத்தில் 'ஜாக்குவார்', மலையாளத்தில் 'கலெக்டர், வில்லன்' ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.


தற்போது தமிழில் 'துருவ நட்சத்திரம், துக்ளக் தர்பார்' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'ராதே ஷ்யாம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்யப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மனோஜ்.


“மாநிலத்தில் அனைவராலும் நேசிக்கப்படும், விரைவில் இந்தியா முழுவதும் நேசிக்கப்பட உள்ள அற்புதமான மனிதருடன் மீண்டும் மற்றொரு பயணத்தை ஆரம்பிக்கப் போவது மகிழ்ச்சி. 'நண்பன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். 'தளபதி 65' ஒரு பான் இந்தியா படமாக இருக்கப் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்று முதல் நடிகர் - செல்வராகவன்இன்று முதல் நடிகர் - செல்வராகவன் தலைவி திட்டமிட்டபடி வெளியாகுமா ? தலைவி திட்டமிட்டபடி வெளியாகுமா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)