மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தெலுங்கில் மீண்டும் பிசியான ஹீரோயினாகிவிட்டார். ரவிதேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியாகி வெற்றிபெற்றதை அடுத்து, பவன் கல்யாணுடன் நடித்துள்ள வக்கீல் சாப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையே ஓடிடி தளத்திற்காக அவர் நடித்துள்ள பிட்டா கதலு என்ற படம் பிப்ரவரி19ம் தேதியான நாளை வெளியாகிறது. அடுத்து பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ரவிதேஜாவிற்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு. அவர் என்னிடத்தில் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். அதேபோல், மகேஷ்பாபு ஒரு அழகான ஹீரோ. அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான நேரங்கள். அல்லு அர்ஜூன் நான் இதுவரை கண்டிராத கடின உழைப்பாளி. நேர்மையானவர். தனது ஒவ்வொரு படங்களுக்கும் தான் செய்ய வேண்டியதை விட அவர் அதிகமான உழைப்பை கொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.