மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
‛ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்' என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் அறிக்கை:
என் மீதும், படங்கள் மீதும் அபரிதமான அன்பு கொண்டு எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் ரசிகர்களே, கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் தகவல் கேட்டு, அரசியல், விளையாட்டு என பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல் வருத்தப்பட வைக்கிறது.
முன்பே அறிவித்தபடி வலிமை படத்தின் செய்திகள், உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.
நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள், பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், கடைபிடிக்க வேண்டும். என் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அஜித் கூறியுள்ளார்