ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

‛ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்' என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் அறிக்கை:
என் மீதும், படங்கள் மீதும் அபரிதமான அன்பு கொண்டு எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் ரசிகர்களே, கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் தகவல் கேட்டு, அரசியல், விளையாட்டு என பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல் வருத்தப்பட வைக்கிறது.
முன்பே அறிவித்தபடி வலிமை படத்தின் செய்திகள், உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.
நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள், பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், கடைபிடிக்க வேண்டும். என் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அஜித் கூறியுள்ளார்




