மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது தமிழில் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினத்தை ஒரு முன்னணி நடிகை பொதுவாக பெரிய ஸ்டார் ஓட்டலில் தான் கொண்டாடுவார். ஆனால், காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு சாதாரண மெஸ்ஸில் தன்னுடைய காதலர் தின டின்னரை சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பொள்ளாச்சியில் ஒரு தம்பதியினர் நடத்தும் அந்த மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டதோடு அவர்களைப் பற்றியும் பாராட்டி பதிவிட்டுள்ளார். “சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகியோர் அதிக அன்புடன் உணவைப் பரிமாறுவார்கள். அதனால்தான் கடந்த 27 வருடங்களாக அவர்களது உணவு தொடர்ந்து சுவையாக உள்ளது. இந்த சிறிய கடைக்கு நான் கடந்த ஒன்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்,” எனக் கூறி அந்த தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் இந்த எளிமையான குணத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.