புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் அங்கு இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதை சமீபத்தில் நடைபெற்ற உப்பென்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக பார்க்க முடிந்தது. உப்பென்னா படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
ஆனால் சமீபத்தில் வெளியான டிரைலரில் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் அவருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை என்கிற விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்தது. இந்தநிலையில் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் புஜ்ஜிபாபு.
“இந்தப்படத்தில் நடிக்கும்போதே இந்த கதாபாத்திரத்திற்கு தனது குரல் செட்டாகாது என கூறிவிட்டார் விஜய்சேதுபதி. அதனை தொடர்ந்து பல டப்பிங் கலைஞர்களை பேசவைத்து பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. இறுதியாக ரவிசங்கரை வைத்து டப்பிங் பேசவைத்தோம். எந்த படத்திற்கும் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிடும் ரவிசங்கர், இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பொருந்த வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசி கொடுத்தார்” என கூறியுள்ளார் இயக்குனர் புஜ்ஜிபாபு