ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தன. தனுஷுடன் இணைந்து நடித்த பட்டாஸ் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் மெஹ்ரீன்.
கடந்த 2019ல் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் உடன் மெஹ்ரீன் இணைந்து நடித்த எப்-2 படம் நன்றாக ஓடியதால், தற்போது அதன் அடுத்த பாகமாக உருவாகி வரும் எப்-3 படத்திலும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து, அதில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இந்த எப்-3 படம் தெலுங்கில் தனது பயணத்தை சீராக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் மெஹ்ரீன்.