மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை சமந்தா தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்ட பின்னரும் தனது நடிப்பை விடாமல் தொடர்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துவரும் சமந்தா தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து செல்கிறார்.
அப்படி சென்னை வரும்போது படப்பிடிப்பின் இடையே கிடைக்கும் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள தனது தோழிகளுடன் ஜாலியாக ஷாப்பிங், டின்னர் என பொழுதை கழித்து வருகிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு நட்பின் மகத்துவத்தை பறைசாற்றி வருகிறார். சமந்தா சென்னை பல்லாவரம் பகுதியில் பிறந்து படித்து வளர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..