துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கடந்த சில நாட்களாக திரையுலகத்தில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அப்படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷைப் பின் தொடர்வதிலிருந்து விலகிவிட்டார். மேலும், அவர்களது யு டியூப் சேனலில் வைத்திருந்த ஜகமே தந்திரம் பட போஸ்டரையும் நீக்கிவிட்டார்.
இதனால், கோபமடைந்த தனுஷ் ரசிகர்கள் நேற்று டுவிட்டர் தளத்தில் தயாரிப்பாளர் சஷிகாந்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்ணன் ஏப்ரல் 2021ல் தியேட்டர்களில் வெளியாகிறது. தேவையான சமயத்தில் உற்சாகமூட்டும் தேவையான ஒரு செய்தி. தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் சினிமா மற்றும் தியேட்டர்களை நம்பி வாழும் அனைவரையும் நினைத்து வெளியிடுவதற்கு, உங்களுக்கு வேறு வழிகள் இருந்தாலும், நன்றி தாணு சார். என்னுடைய ரசிகர்கள் சார்பாக மிகப் பெரும் நன்றி. இது அவர்களுக்கு பல அர்த்தத்தைக் கொடுக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் இந்த அறிக்கை ஜகமே தந்திரம் தயாரிப்பாளரை மறைமுகமாகக் குறிப்பிடுவது போலவும், தன் ரசிகர்களுக்கு ஆதரவு சொல்வது போலவும் உள்ளது.