ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கியவர் சினேகா. அவரும், நடிகர் பிரசன்னாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அருண் வைத்யநாதன் இயக்கிய 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறான். கடந்த வருடம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ஆத்யாந்தா எனப் பெயரிட்டனர். இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரசன்னா, சினேகா தம்பதியினர் கொண்டாடினர்.
அந்தப் புகைப்படங்களை சினேகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.