டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கியவர் சினேகா. அவரும், நடிகர் பிரசன்னாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அருண் வைத்யநாதன் இயக்கிய 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறான். கடந்த வருடம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ஆத்யாந்தா எனப் பெயரிட்டனர். இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரசன்னா, சினேகா தம்பதியினர் கொண்டாடினர்.
அந்தப் புகைப்படங்களை சினேகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




